வியாழன், 24 அக்டோபர், 2013

திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு

திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு

திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு 


திப்பு சுல்தான் 

1799 
மே மாதம் நான்காம் தேதிசாதாரண சிப்பாய் போல்ஆங்கிலேய அந்நியபடைக்கெதிராக களமிறங்கிதனது உடலில் கடைசி மூச்சுநிற்கும் வரை உறுதியுடன்போராடி உயிர் தியாகியானார்மாவீரன் திப்புஅந்த வீரத்திருமகனின் வரலாற்றைநினைவு கூறுவது இந்தியதேசத்தின் விடுதலைவரலாற்றையே நினைவுகூறுவதற்கு சமமாகும்.கிழக்கிந்தியக் கம்பெனியின்குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள்வைத்த பெயர் இதுவாகும்இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியைவிதைத்த தீரர்தான் திப்புஅதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம்செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேயஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெறதிப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியதுஆனால் அந்த மாபெரும் வீரனின்தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல்விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப்புரட்டை எழுதி வைத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரிஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும்பெரும்சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும்திப்பு சுல்தானும்அவர்கள்பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தைஏற்படுத்தினார்கள்கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும்அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).
1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்ததிப்புசுல்தான்தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடியுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.
1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்படஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார்.கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார்திப்பு.

tipu sultan
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார்மேற்கு கடற்கரையிலிருந்துஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப்படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக்கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம்ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால்போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்இந்த அவமானம்ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால்தூண்டி விடப்பட்டதுதிருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பதுஎமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத்தயாரானான்.
இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும்தொண்டைமான்,ஹைதராபாத் நிஜாம்மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும்ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர்சற்றும் கலங்காத திப்பு எதிரிகளைதன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால்திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லைஇதனைக் குறித்து ஆங்கிலேயதளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக்கோட்டையையும்தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்றுகுறிப்பிட்டான்.
போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள்நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம்சென்றதுஇழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டதுஇழப்பீடு தொகையைசெலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டனர்இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும்,பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.
திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்குவழியை கையாள ஆரம்பித்தனர்லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின்அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர்இதனைக் குறிப்பிட்டுவெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம்துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.
ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாககளமிறங்கினார் திப்புதுரோகிகள் ஒருபக்கம்கூட இருந்தவர்களின் குழிபறித்தல்ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்குவருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல்தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார்திப்பு.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்குண்டுக்காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசேயாரேனும்ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமாசரணடைந்து விடலாம்” என்றுபதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார்திப்புஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க்களத்திலேயே தன் கண்ணை மூடியது.
எதிரிகள் உயிர்த் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.
திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சி பெற்றராணுவமும்தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான்.இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாகத்திகழ்ந்தார் அவர்இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில்தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான்பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன்கூறுகிறார்.
இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின்பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு.சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்தியஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும்ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழுமூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள்பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடியஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ளஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்றுகூறியிருந்தார்.
 click the link= <<
உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு >> 

 நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக்கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும்,ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தைநிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார்ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சாபயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடைசெய்தார் திப்புசுல்தான்ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில்விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாகதானமளிப்பதையும் தடை செய்தார்.
அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணைபிறப்பித்தார்கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையானசடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில்எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாகநாயர் சமூகம் மாறியதுநம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திரப்பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரிகன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி கன்னியராகவே இறந்தனர்.
வரதட்சணைக் கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்ததுஇத்தகைய கலாச்சார,பண்பாட்டுச் சீரழிவுகுலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்தகாலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கினசன்மார்க்கவிதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்புஉடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக்கடுமையாக வெறுத்திருந்தார்குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்துகீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வுமிகப் பிரபலமாக இருந்தது.
சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாக திப்புகருதியிருந்தார்சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்தவாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார்அதன்காரணத்தினாலேயேமேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில்நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்புகடுமையாகக் கோபப்பட்டார்இதனைபி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.
இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன்கொள்கைகளைப் பின்பற்றிய திப்புதனது பிரஜைகளும் அசிங்கமான பழக்கவழக்கங்களைத் துறந்துதூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்கவேண்டும்இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம்தான் மக்களைப்பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத்தூண்டியது.
உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும்உங்களின் தாய்சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களதுபூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில்நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில்பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும்கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள்இவ்விதமுள்ளபாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்துசாதாரண மனிதர்களைப் போன்றுவாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”
மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்எத்தனை மகத்துவமிக்க கட்டளை இதுஎன்பது புரியும்!
கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்தசட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.
திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர்.அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்விதகாழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லைஇந்துக் கோயில்களுக்கும்மடங்களுக்கும் திப்புஅளித்த கொடைகள் ஏராளம்.
திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுதொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும்மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனதுஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பதுபுலனாகிறது.
இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த .இலக்குமிநாராயணன்தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்ஆனால் இதனைஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருதபிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாகமாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம்அஸ்ஸாம்பீகார்ஒரிஸ்ஸா.பி., .பிஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்றஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின்ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இச்சம்பவம் நிச்சயமாக பொய்யானஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்றுஅவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத்எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச்செய்தார்.
போர்களத்தில் நேர்மை
தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர்பணக்காரர்கள் ஆகலாம்ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்மொத்தஇராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும்போர்களை போர்க்களத்தோடு முடித்துக்கொள்ளுங்கள்அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள்பெண்களைக் கவுரவமாகநடத்துங்கள்அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள்குழந்தைகளுக்கும்முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்புஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்துஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”
மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துகொள்ள வேண்டும் என விரும்பினார்ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள்சக்திப் போராட்டமா வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார்இதற்காக ஒருஉத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சிவழங்கப்பட வேண்டும்தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி ்சுடும் பயிற்சிஅளிக்கப்படவேண்டும்” என்பதே அந்த ஆணை.
தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்குஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.
விடுதலைப்போரின் முன்னோடியாகவும்ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும்திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன்திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராகதயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்தஇன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர்சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர்பலர்காயமடைந்தனர்ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டதுசஞ்சய்கான்பலத்தகாயங்களுடன் பலமாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார்இந்தியாவைஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றைஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்ததுஅந்த நபர் பாசிச சிந்தனைக்கொண்ட மல்கானியாவார்அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ‘கற்பனைக்கதைஎன்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும்நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றைகற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும்காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.
சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேயஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்குலண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாகபாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.
அந்நிய கரன்சிக்கும்சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின்ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாகவாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளதுஏகாதிபத்தியத்திற்கும்பயங்கரவாததேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கும்ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.
அநீதிக்கெதிராகவும்அக்கிரமத்திற்கெதிராகவும்பாரபட்ச நீதிக்கெதிராகவும்அரசபயங்கரவாதத்திற்கெதிராகவும்மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்வறுமை,லஞ்சம்ஊழல்நிர்வாக சீர்கேடுகள்தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம்,உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்குதிப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும்உந்துசக்தியாகவும் மாற வேண்டும் .அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக