வியாழன், 24 அக்டோபர், 2013

மருதநாயகம் ஒரு முழு வரலாறு


ஊரும்பெயரும்
மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானதுஇவர் பூலித்தேவன் மற்றும் திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர்இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாகதெரியாவிடினும்பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செதிவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.
இராமநாதபுரம் மாவட்டம் பனையூரில்இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும்,பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளனமதுரைபகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறதுஇஸ்லாத்தை ஏற்றகாரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டதாகவும்கூறப்படுகிறதுஇவர் மருதுநாயகம்கான்சாஹிப்மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் எனபல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
இவர் பிறவி முஸ்லிம்இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேராநத்தர்ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.
1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள்காட்டப்படுகிறது.
வளரும் பயிறும்துடிப்பான தொடக்கமும்
சிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப்.விளையாட்டாக இருந்தாலும்வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில்வெற்றி பெறுவார்.
மருத்துவர்தையல் தொழிலாளிபடகோட்டிவிளையாட்டு வீரர்வித்தகர் என பல திற மைகள்வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம்இருந்தது.
தஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின்படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார்இதுதான் முதல் ராணுவ அனுபவம்!

பிரெஞ்சுப் படையின் ஆயுதம்
பிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார்சென்றவர் அங்கேயும் போர்புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார்புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்தபிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரது அறிவும்தலைமைப் பண்பும்போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில்ஆழ்த்திற்றுவிளைவுகுறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப்மருதநாயகம்.

ஆற்காடு நவாப்
ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசுதென்னிந்தியாவில் சிதறியதால்,கர்நாடக நவாப்ஐதராபாத் நிஜாம்ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள்தோன்றின.
அப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்ததுஒரே ரத்தஉறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும்முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.
சமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும்பிரெஞ்சுக்காரர்களுக்கும் அதுவசதியாய் போயிற்றுசாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும்முகம்மது அலிக்குஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.
இதன் நோக்கம்ஆதிக்க போட்டியும்போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான்.இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும்பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல்கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்துதங்கள் வியாபார நலன்களைபாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவாஅதுபோல்தான் அன்றும் இருந்தது.
ஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும்முஹம்மதுஅலிக்கும் மோதல் ஏற்பட்டதுதிருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.
திறமைகுணம்தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறிபிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தனமருதநாயகம் பங்கேற்றபிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப்இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார்மருதநாயகம் வீரதீரத்தோடு போரிட்டாலும்மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்டஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லைபிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தாசாஹிபின் உடல்திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.

நிஜாம் – நவாப்?
இன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில்ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார்நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம்.ஆனால்இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாதுபோர்க்களம்செல்ல வேண்டும்தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்ஆட்சிப் பணிகளை கவனிக்கவேண்டும்இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார்நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம்.ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும்ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.

யார் ஆற்காடு நவாப்?
ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது.யாரும்யாருக்கும் கட்டுப்படவில்லைஒவ்வொருவரும் தங்களை நவாபுகள்நிஜாம்கள் என்றுசிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கியஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும்பலமானதாகவும் இருந்ததுஇவர்களிடம்அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில்ஆங்கிலேயே வணிகர்களும்படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.

ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்
ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியதுஅவர்கள் புதுச்சேரியையும்காரைக்காலையும் மட்டுமேதக்க வைத்துக் கொண்டனர்இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும்கான்சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.
கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன்இணைந்தார்தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில்பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர்ஆனால்அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாகமாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.
வீரமும் – பரிசும்
மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்கவேண்டி வந்ததுஇருவரும் வீரர்கள்மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர்அலியும்மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!
அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாதுவிதியை என்னவென்பதுதிண்டுக்கல் அருகே போர்நடந்ததுஇந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது.ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்ஆங்கிலேயர்கள் பூரித்தனர்தான் யார்என்பதையும்ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில்மருதநாயகம் செய்த போர் அதுஇதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாகஇருந்தது.
நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்மருந்து தடவினார்ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்கநியாயமில்லை.
மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால்புகழின் உச்சிக்குப் போனார் கான்சாஹிபு மருதநாயகம் 

மாவீரன் பூலித்தேவன்


அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்தபூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்ததுமருதநாயகம் முதல்தோல்வியைச் சந்தித்தார்ஆனால் தளரவில்லைஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான்செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.
1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையைமருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.
ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமேஇருந்தபோதுநூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர்அதில் அவர் காட்டியவீர தீர செயல்களும்அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலேசென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.
இன்றைய மதுரைதேனீதிண்டுக்கல்ராமநாதபுரம்சிவகங்கைவிருதுநகர்தூத்துக்குடி,திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால்,ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

பொறாமை
இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியதுஇன்று ஆற்காடுஇளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான்ஆற்காடு நவாபினர்அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான்அன்று பெற்றஅதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறதுதுரோகமும் கூடஇன்று இந்தியாவின் மன்னர்மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும்ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும்ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான்!இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.
சரிமீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம்கான்சாஹிபுக்கும்ஆற்காட் நவாபுக்கும்இடையில் பனிப்போர் தொடங்கியதுஇதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்திறமையற்றநவாபையும்ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின்சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்!
ஆற்காடு நவாப் .
இதுவரை ஆற்றல் மிகு தளபதியாய்ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன்நமது நாட்டை நாமே ஆளக் கூடாது-? எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும்ஆங்கிலேயர் களிடமும்அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்-? இவர்கள் யார்-? அன்னியர்கள்தானேஇந்தியமன்னர்களுக்குள் நடைபெறும் சண்டைசச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடையவேண்டும்இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்ததுஅதுவே தேசப் பற்றையும்விடுதலைஉணர்வையும் தூண்டியது!

இங்கிலாந்து & பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்
இந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்தபோர்ச்சுக்கீசியர்கள் தான்அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள்பின்னர்கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.
டேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள்.டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும்து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள்.நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள்.வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறதுஆட்சி அல்ல எனலாம்ஆனால்இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்க ளும்பிரான்ஸ் நாட்டவரானபிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும்நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.
அதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தனஅல்லது சண்டையிடும்இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர்.இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும்அதற்குக் காரணம் மருதநாயகம்தான்மருதநாயகம்பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில்தோல்வியடைந்திருப்பார்கள்.
மருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன்இணைந்ததால்தான்பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச்செய்தார்அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிசுருண்டது.
மருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதிபிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும்இந்தியாவின் ஒரு பெரும் பகுதியைஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும்தமிழகத்தில் விடுதலைப் போராட்டம்ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல்பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.
வரலாறு மாறியதற்குக் காரணம்மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பானசெய்தியாகும்.

அன்றைய ஐரோப்பிய அரசியல்
மருதநாயகத்தின் வரலாறை பார்ப்பதற்கு முன்பு அன்றைய சர்வதேச அரசியலையும்அதன்இந்திய விளைவுகளையும் அறிந்து கொள்வது நல்லது.
ஐரோப்பாவிலிருந்து வருகை தந்த வெவ்வேறு நாட்டவர்களான ஆங்கிலேயர்கள்,போர்ச்சுகீசியர்கள்டச்சுக்காரர்கள்பிரெஞ்சுக்காரர்களுக்கு மத்தியில் இந்தியாவில் யார்ஆதிக்கம் செலுத்துவது என்று ஏகாதிபத்திய போட்டி நடைபெற்றது.
இன்று வெளிநாட்டு கம்பெனிகள் சந்தை பொருளாதாரம்உலக மயமாக்கல் போன்ற குறுக்குவழிகளில் இந்திய பொருளாதாரத்தையும்மறைமுகமாக இந்திய அரசியலையும் தங்கள்விருப்பங்களுக்கு வளைப்பது போலத்தான் அன்றைய அரசியல் நிலையும் இருந்தது.
18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டுநவீன இயந்திரங்கள்கண்டுபிடிக்கப்பட்டுஅதன் கரணமாக அனைத்துப் பொருள்களும் வேகமாகவும்தரமாகவும்உற்பத்தி செய்யப்பட்டனபல ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டு முன்னேறின.
அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கு உலகம் முழுக்க ஏற்றுமதி வியாபாரத்தைபெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுஇன்று இந்தியாவை உலக நாடுகள் மிகப் பெரியவியாபார சந்தையாக பார்ப்பது போல் அன்றும் பார்த்தனஅதன் விளைவு வியாபாரக்கம்பெனிகள் என்ற போர்வையில்இந்தியாவில் தங்கள் கவனத்தை தீட்டினஒளரங்கசீப் 1707ல்இறந்த பிறகு முகலாயப் பேரரசு பலம் குன்றியதும்குறிப்பாக தென்னிந்தியாவின் ஒன்றுபட்டஆட்சி இல்லாமல்குறுநில மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதும்ஒரேஆட்சியில் கூட வாரிசுரிமை சண்டைகள் நடந்ததும்அவர்களுக்கு வசதியாய் போயிற்று.
சென்னையில் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆங்கிலேயரான இராபர்ட் கிளைவ்வணிகராக மட்டுமின்றிசிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார்தனது கம்பெனிக்குபாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படையையும் வைத்திருந்தார்இதேபோல் ஐரோப்பாவில் அவர்களுக்கு சவாலாக இருந்த பிரெஞ்சு கம்பெனிகளும் தங்களுக்கெனபிரெஞ்சுப்படையை வைத்திருந்தனஇதற்கு தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட பகைகாரணமாகஎங்களுக்கு ஒரு படை தேவை என அன்றைய ஆட்சியாளரான ஆற்காடு நவாபிடம்கூறினர்.
காரணம்அப்போது இந்தியாவை ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும்பிரான்சுக்கும் கடும்போட்டி நிலவியதுஉலக அளவிலும் இவ்விரு நாடுகளுக்கிடையே மோதல் இருந்து வந்தது.ஆனால்அது இந்தியாவையே ஆக்கிரமிக்கப் போகிறது என்பது அப்போது ஆற்காடு நவாபுக்குத்தெரியவில்லை.
இப்படி நடந்திருந்தால்?
மருதநாயகம்ஹைதர் அலிபூலித்தேவன் ஆகியோர் சமகாலத்தவர்கள்சமமான வீரர்கள்.இவர்கள் ஒருவருக்கொருவர் போரிடாமல் ஒன்றுபட்டிருந்தால் அன்றைய தமிழ் மண்ணில்ஆங்கிலேயர் சாம்ராஜ்யம் நிலைகுலைந்திருக்கும்ஹைதர் அலியும்பூலித்தேவனும் ஆரம்பம்முதலே ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள்ஆனால் மருதநாயகம் வாழ்நாளில் இறுதிக்கட்டத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.
ராணுவ அறிவு இருந்த அளவுக்குஅரசியல் அறிவிலும்தாயகத்தின் வரலாற்று அறிவிலும்மருதநாயகம் மற்ற இருவரையும் விடதெளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம்எனலாம்எனினும் கடைசியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து தன்னை விடுதலைப்போராட்ட வீரராக அடையாளப் படுத்தினார் மருதநாயகம்.
ஆரம்ப நாட்களிலேயே ஹைதர் அலிமருதநாயகம்பூலித்தேவன் ஆகியோரிடையேபுரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு திசைமாறியிருக்கும்.
மருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 7 1/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார்நான் போர்வீரன் மட்டுமல்ல… மிகச்சிறந்தஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார்அவரது ஆட்சியில்தான்தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.
ஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை,ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள்.தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்துதன் மீது நம்பிக்கை வைத்தஆங்கிலேயர்களைதன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்!

காவிரி காவலன்!
மக்களை காப்பதிலும் சரிஅவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரிமருதநாயகம்தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார்ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர்நடத்திக் கொண்டிருந்த போதுபோரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும்,தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்ததுஇதன் மூலம்மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம்இதை உளவுமூலம் அறிந்த மருதநாயகம்பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார்இதன்மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும்விவசாயிகளையும் காப்பாற்றினார்.
பொதுப்பணித்துறை
நாட்டின் வளத்தை பெருக்குவதிலும்அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும்அன்றைய கால கட்டத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார்.இன்று மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெருகான்சாபுரம்கான்பாளையம் போன்றபகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டனவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம்தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம்ஆகியன அவரது புகழை கூறிக்கொண்டிருக்கின்றன.
முல்லைப் பெரியாறு
இன்று பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குரிய பெரியாறு அணைக்கட்டிலிருந்துபாசன நீரைமதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான்தமிழகத்தில்உருவாகி,தமிழகத்தை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில்,அணைக்கட்டு ஒன்றை கட்டினார்திருநெல்வேலியில் உள்ள
மேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.
விவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உணர்ந்த மருதநாயகம்அதற்காக எல்லாவகையிலும் பாடுபட்டார்விவசாயத்திற்கு அடுத்த தொழிலான நெசவுத் தொழிலையும்ஊக்குவித்தார்இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட
இந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர்அவர்களின்உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார்இதனால்உழவுத்தொழிலுடன்நெசவுத்தொழிலும் செழித்தது.

போக்குவரத்துத் துறை
நாட்டின் வணிகத்துக்கு துறை முகங்களும்நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்துதரமான சாலைகளை அமைத்தார்அன்று ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டுஇன்றுஇந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் கொடைக்கானலுக்கு முதலில் சாலைஅமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கதுநவீனஇயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாகஅமைத்து ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும்தூத்துக்குடிதுறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளைஉருவாக்கினார்தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக திகழ்ந்த திருநெல்வேலிகம்பம்போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளைஅமைத்ததால் மக்களின் ஆதரவும்அன்பும் பெருகியது.
இதைப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்னல் வில்லியம் புல்லர்டன்என்ற ஆங்கிலேயர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.
மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும்பலன் தரத்தக்கதாகவும்செயல்பட்டதுஅவரது நீதி சார்பற்று இருந்ததுஅவரது செயல்பாடுகளை,
நடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” இவ்வாறு மருதநாயகத்தின்ஆட்சியை அந்த ஆங்கிலேயர் புகழ்கிறார்.
மதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதைநாட்டுப்புறப் பாடல்களும் விளக்குகின்றனகாணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.
(யாரும்எட்டி அதை பார்க்க முடியாது.
அதிலே – எறும்பு
மொய்க்காமல் இருந்ததடா பணமும்
என்றும்,
கட்டேது காவலறியர்கள் & தேசம்
கறந்து பால் வெளிவைத்தால்
காகம் அனுகாது
என்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.
(நன்றி : மதுரை நாயகன் மாவீரன் கான்சாஹிபு – நந்தர்ஷா)
அதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால்அதில்  & எறும்பு கூடஅணுக அஞ்சும் என்பதும்கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூடநெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.
அவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும்குற்றங்கள் குறைவு என்பதையும்தான்இதன் மூலம் விளங்க முடிகிறது.

மனிதநேய கொள்கை
அவரது மனைவி மாசா போர்ச்சுகீசிய ஆணுக்கும்தலித் பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும்கூறப்படுகிறதுஆங்கிலம்பிரெஞ்சு மொழிகள் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் அவர்கெட்டிக்காரராக திகழ்ந்தார்.
மருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார்தொழுகையை தவறாதுகடைப் பிடித்திருக்கிறார்இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும்நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறதுஅவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.
முந்தைய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டமதுரை அழகர் கோவிலின் நிலங்களை மீட்டு,கோயிலுக்கு திரும்பவும் ஒப்படைத்தார்மருதநாயகம் இந்து சமுதாய மக்களின் உணர்வுகளைபுரிந்துக் கொண்டு செயல்பட்டார்.
அம்மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சீர் செய்துகொடுத்ததால் மக்கள் இவரது ஆட்சியை போற்றினர்மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்உள்ள செப்பேடுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.
தொடங்கியது மோதல்
இவ்வாறகமதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ்இதை ஆற்காடு நவாப் முகம்மதுஅலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லைமூக்கு சிவந்ததுஉள்ளம் வெந்தது!
விளைவுதிருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடைவிதித்தார் ஆற்காடு நவாப்இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம்.ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லைபிரச்சனையை சுமூகமாக தீர்க்கவிரும்பிய ஆங்கிலேயர்கள்மருதநாயகத்திடம் திருச்சிதானே..
போனால் போகட்டும் உனக்கு மதுரைதிருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும்உரிமையை தருகிறோம் என்றனர்.
அதிலும் திருப்தியடையாத ஆற்காடு நவாப்வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காகசமர்ப்பதில்லை என்று அடுத்த குண்டை வீசினார்அவரது பொறாமை எந்தளவுக்கு இருந்ததுஎன்றால்தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்என்று அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டினார்இக்கால அரசியல்வாதிகளையே தூக்கிசாப்பிட்டார் நவாப்ஆடிப் போய்விட்டார் மருதநாயகம்!
ஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபாமருதநாயகமாயாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது?யாருக்கு பணிவதுஎன முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது.
திறமையற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கேமுன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
அது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை!
உத்தரவு பறந்ததுமிஸ்டர் மருதநாயகம்… இனி நீங்கள் வசூலித்த கப்பத்தை ஆற்காடுநாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்கள்அதுவரைஆங்கிலேயர்களிடம்நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்குகோபம் பீறிட்டதுகொதித்து எழுந்தார்தன் ஆற்றலையும்தியாகங்களையும் மறந்து விட்டு ஓர்அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை.சிங்கமும்சிறு நரியும் சமமாக முடியுமாஉயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக